புகிஸ் அருங்காட்சியகம் மலேசியாவின் ஜோகூரில் உள்ள பொன்டியானில், கம்பங் தெலுக் கெராங்கில் அமைந்துள்ளது. மலாய்க் மக்களைப் பற்றிய, குறிப்பாக புகிஸ் இனக்குழுவைப் பற்றிய பல்வேறு வரலாற்று சேகரிப்புகளைப் பாதுகாப்பதில் ஆர்வம் கொண்ட உள்ளூர்வாசிகளால் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டது. சுலவேசியில் உள்ள மக்காசர் டச்சுக்காரர்களால் தாக்கி கைப்பற்றப்பட்ட பிறகு, புகிஸ் மக்கள் மலாய் தீபகற்பத்திற்கு வந்தனர். சுலவேசியின் அம்போன் தீவில் வசித்த பெரும்பாலான மக்கள் டச்சுக் காலனித்துவவாதிகளால் வெற்றிகரமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த அருங்காட்சியகத்தில், பல்வேறு பெரிய அளவிலான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான சமையலறைப் பாத்திரங்களும் உள்ளன. இந்த அருங்காட்சியகம் தொழில்முறையாக நிர்வகிக்கப்படாததால், அதில் உள்ள சில பொருட்கள் அழகாகப் பராமரிக்கப்படவில்லை. நுழைவுக் கட்டணம் இல்லை, ஆனால் நீங்கள் மனமுவந்து நன்கொடை அளிக்கலாம்.
இந்த அருங்காட்சியகம் முதலில் 1982-ல் புக்கிஸ் பாரம்பரியம் என்ற பெயரில் நிறுவப்பட்டது. 26 ஜூலை 1994 அன்று, ஜோகூர் அரசாங்கம் ஜோகூர் பாரம்பரிய அறக்கட்டளை மூலம் இந்த அருங்காட்சியகத்திற்கு ஆதரவளித்து, இந்த அருங்காட்சியகத்தை மலேசியாவின் முதல் புக்கிஸ் அருங்காட்சியகம் என்று அறிவித்தது.[1] அக்டோபர் 2016-ல், தெற்கு சுலவேசியின் ஆளுநர் ஷாஹருல் யாசின் லிம்போ இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, உள்ளூர் புக்கிஸ் குடியிருப்பாளர்களைச் சந்தித்தார். வெவ்வேறு நாடுகளில் உள்ள புக்கிஸ் மக்களிடையே உறவுகள் பேணப்படும் என்று அவர் நம்புகிறார்.[2]
மறுமொழி இடவும்